போராட்டகார்களை அச்சுறுத்தும் புலனாய்வாளர்கள்

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரணிக்கு கடும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

அரச புலனாய்வாளர்கள் ,இராணுவ புலனாய்வாளர்கள் பேரணியாக செல்பவர்களை பின் தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளதோடு அவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்ப்பாட்டிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

அத்தோடு பேரணி  பழைய செம்மலை மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட வேளை கொக்குளாய் பொலிஸ் நிலைய பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் ஒவ்வொரு வாகன இலக்கங்களை பதிவு செய்து புகைப்படமும் எடுத்தனர்