புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பகுதியில் நண்பர் ஒருவரை ஒன்றாக மது அருந்திவிட்டு கிணற்றில் தள்ளிய சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் 5ஆம் திகதி 21 வயதான விஜயராசா யாசிகரன் கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மற்ற மூன்று நண்பர்கள் சேர்ந்து அந்த இளைஞனை கிணற்றில் தள்ளியுள்ளனர்.
இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாக்குமூலங்களின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர், அதேவேளை உயிரிழந்த இளைஞரின் உடலில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மனுவில் உத்தரவிடப்பட்டுள்ளது.