மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண்ணொருவர் பலி! இருவர் படுகாயம் !

கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் காரைதீவு சண்முகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அறுவடை செய்த நெல்லை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் உழவு இயந்திரமும் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த மீராமுகைதீன் பாத்தும்மா (வயது 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் அக்கரைபுரத்தில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.