கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து ! 11 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் !

கிளிநொச்சி – பளையில் வாகன விபத்தில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இயக்கச்சியிலிருந்து பாளை நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி ஒன்று புதுக்காட்டு சந்திக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றச் சென்ற மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மாணவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் பளை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.