இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் காலமானார்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக கடமையாற்றிய ஆளுநர் எச்.பி.திஸாநாயக்க காலமானார்.இவர்  1992 ஜுலை முதலாம் திகதி தொடக்கம் 1995 நவம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றியுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுனராக பதவியேற்க முன்னர் இவர் இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பதவி வகித்த அவர், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் 1995 – 1998 வரையான காலப்பகுதியில் பன்னாட்டு நாணய நிதியத்தின் பதில் நிறைவேற்றுப்பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

இந்நிலையில் நாட்டின் அரசதுறையில் அளப்பரிய சேவையாற்றிய எச்.பி.திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது 85 ஆவது வயதில் காலமானார்.