வயலின் சேற்றுப் பகுதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

கண்டியில் வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

சம்பவம் கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் இருந்து   இன்று (11) காலை பெண்ணின் சடலம்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த பெண் 26 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில்   சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.