அரச ஊழியர்களுக்கான மகிழ்வான செய்தி!

இலங்கையில் இதுவரையில் தகுதியற்ற சுமார் 70 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பதிலாக தகுதியான அரச அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் பிரதிநிதிகள் இன்மையால் பொறுப்புக்கூற வேண்டிய தகுதிவாய்ந்த அதிகாரிகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டும்.

தகுதி இருந்தாலும் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய வினைத்திறன்மிக்கவர்கள் தெரிவு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தகுதியற்ற பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் மாநகர ஆணையாளர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.