இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் போக்குவரத்து முகாமையாளர் ஒருவர் கைது!

இலங்கை போக்குவரத்துச் சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் போக்குவரத்து முகாமையாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இ.போ.ச சாரதி ஒருவரிடமிருந்து 15,000 ரூபாவை இலஞ்சமாக பெறும்போதே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.