களுத்துறை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது!

களுத்துறை, பலதொட பிரதேசத்தில் அண்மையில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் நேற்று முன்தினம் (17-06-2023) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபர் பதுங்கியிருந்ததாக கூறப்படும் களுத்துறை கல்லசேன பிரதேசத்தில் உள்ள இல்லத்தில் வைத்து களுத்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் உயிரிழந்தவரின் உறவினர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

கைதான சந்தேக நபர் நேற்று (ஜூன் 18) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி கொடபரகாஹேன பகுதியில் உள்ள வீதியொன்றில் 43 வயதான சுஜித் தர்மசேன என்பவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தாக்குதலின் போது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக களுத்துறை-தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.