அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நால்வர் உயிரிழப்பு!

   அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியா நகரில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்ட நபர், குண்டுதுளைக்காத அங்கியை அணிந்திருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு ரைபிள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மேலுதிக மெகஸின்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.