பேராதனை பல்கலைக்கழக மாணவன்திடீரென உயிரிழப்பு!

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவனொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த மாணவன் மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம் மாணவன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவன் உயிரிழப்பு

மாணவன் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மாணவர்களுடன் தங்கியிருந்த நிலையில் மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.