சமுர்த்தி வங்கியில் பெண்ணுக்கு நிகழ்ந்த துன்பம்!

 சமுர்த்தி வங்கியில் வைப்பிலிடப்பட்ட பணத்தைப் பெறச் சென்ற பலரை வங்கி அதிகாரி ஒருவர் உட்பட சில முக்கிய அதிகாரிகள் அநாகரீகமாக நடத்துவது தொடர்பில் சமூக ஊடகங்களில் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில் அக்குரஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமுர்த்தி வங்கி ஒன்றில் தான் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தைப் பெறச் சென்ற சமுர்த்தி பெறும் வறிய பெண் ஒருவர் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இரக்கமின்றி நடந்துகொண்ட அதிகாரிகள்

தனது குழந்தைக்கு மருந்து வாங்குவதற்காக தனது கணக்கில் இருந்த 61,000 ரூபாயிலிருந்து சிறிது பணத்தைக் கேட்டதாகவும், ஆனால் அதிகாரிகள் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதையடுத்து , தனது கஷ்டத்தை கூறியதையடுத்து, 5,000 ரூபா கொடுக்க ஏற்பாடு செய்ததாகவும் குறித்த பெண் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.