நாட்டின் அதிகாரத்தை சஜித்திடம் ஒப்படைகள் மக்கள் மூடர்கள் அல்ல

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க நாட்டு மக்கள்  மூடர்கலல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொய்யுரைக்காமல் உண்மையை குறிப்பிட்டு   அரச நிர்வாகத்தை  முன்னெடுக்கிறார் என கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற  மூளைசாலிகள் வெளியேற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதாரப் பாதிப்பால் மூளைசாலிகள் தற்போது  நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்  என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூளைசாலிகள் வெளியேற்றம் இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல என்பதை எதிர்கட்சியினர்  முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். மூளைசாலிகள் வெளியேற்றத்தை தமது அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத காரணத்தால்  மூளைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று எதிரணியினர் குறிப்பிடுகிறார்கள். நாட்டில் யார் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. அரகலய என்பதொன்றை ஆரம்பித்து நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளை தோற்றுவித்தவர்கள் தான் இன்று ஸ்திரமற்ற அரசியல் காரணிகளால் மூளைசாலிகள் வெளியேறுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இதுவேடிக்கையாகவுள்ளது.

பொருளாதாரப் பாதிப்புக்கு ஓரிரு இரவில் தீர்வு காண முடியாது. வரியை அதிகரித்தாலும் விமர்சிக்கிறார்கள்,குறைத்தாலும்  விமர்சிக்கிறார்கள். வரி வருமானத்தை அதிகரிக்காமல் ஒருபோதும் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது  என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அறியாமல் இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்க மக்கள் மூட்டாள்கலல்ல.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே  நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தினார். வங்குரோத்து நிலைக்கு மத்தியில் பிரபல்யமடையும் வகையில் ஜனாதிபதி செயற்படவில்லை. நாட்டு மக்களுக்கு உண்மையை குறிப்பிட்டு சிறந்த முறையில் செயற்படுகிறார். ஆகவே நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள் என்றார்.