100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று!

மேல், மத்திய, சப்ரகமுவ, தெற்கு, மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி இன்று (11) பதிவாகக்கூடும்என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் குருணாகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் இரவு முதல் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.