பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் 955 சந்தேக நபர்கள் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் நேற்று (07) முதல் இன்று (07) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 435 கிராம் ஹெரோயினும், 261 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 1,403 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.