பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகரப் பகுதி ஒன்றில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை!

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகரப் பகுதி ஒன்றில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இசம்பவத்தில் 52 வயதான தாய் மற்றும் 21 வயதான மகள் ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மிகவும் அதிர்ச்சியடைந்த நிலையிலிருந்த தந்தையும் இரு ஆண் பிள்ளைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

வேலை முடிந்து இன்று காலை வீடு திரும்பிய தந்தையார் மனைவியும் மகளும் வீட்டு அறையில் கூரிய ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டார் என்று கூறப்படுகிறது.

அயலவர்களால் அவசர மீட்புப் பிரிவிவினரும் காவற்துறையினரும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தந்தையாரும் அவரது இரண்டு புதல்வர்களும் மிகவும் அதிர்ச்சியுற்றவர்களாகக் காணப்பட்டனர் என்றும் பின்னர் அவசர முதலுதவிப் பிரிவினரால் மூவரும் பொலிஸ் பாதுகாப்புடன் பொந்துவாஸ் மருத்துவமனைக்கு (centre hospitalier René-Dubos de Pontoise) கொண்டு செல்லப்பட்டனர் என்றும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்