களுத்துறை பகுதியில் வெடிபொருட்களுடன் இளைஞர் ஒருவர் சிக்கினார்!

களுத்துறை, ஹொரணைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்ககொடவெல்ல மகுருவல பிரதேசத்தில், வெடிபொருட்களைத் தம்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரைப் பாணந்துறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

போதுருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது 22 டெட்டனேட்டர்கள், 150 வோட்டர் ஜெல்கள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.