இன்று நாட்டை வந்தடைந்துள்ள 40,000 மெட்ரிக் டன் டீசல்!

இன்றையதினம் 40,000 மெட்ரிக் டன் தாங்கிய டீசல் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அதன் மாதிரிகள் பரசோதிக்கப்பட்டு வருவதாக எரித்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இன்று மாலை மற்றுமொரு கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.