எரிவாயு கொள்வனவு தொடர்பில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சித் தகவலை வெளியிட்ட லிட்ரோ நிறுவனம்!

வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் பொதுமக்கள் எரிவாயு கொள்வனவிற்கு வரிசையில் பலமணிநேரம் காத்திருக்க தேவையில்லை என என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் லிட்ரோ நிறுவனங்கள் இம்மாத இறுதிக்குள் தேவையான எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது என்றும்.

அதன்படி அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் வரிசைகள் இன்றி எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.