கோட்டாக்கு நடந்ததுதான் ரணிலுக்கும் நடக்கும் எச்சரிக்கை விடுத்த பொன்சகோ!

“நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டக்காரர்களை கைது செய்து ஒடுக்குகிறார்.

  • இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“அரசாங்கத்திற்கு எதிரானவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட அவமானத்தை இன்றைய ஜனாதிபதியும் சந்திக்க வேண்டிவரும்.

69 இலட்சம் மக்கள் தனக்கு வாக்களித்ததாக வீர உரை நிகழ்த்திய கோட்டாபய இறுதியில் இலங்கையை விட்டு விரட்டப்பட்டார்.

எந்த நாடும் அவருக்கு அடைக்கலம் கொடுக்காத நிலையில் இன்று அவர் மீண்டும் இலங்கைக்கு வர முயற்சிக்கிறார்” – என்றார்.