இலங்கைக்குள் தஞ்சம் அளிக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் மனு அணுப்பிய நித்தியாணந்தா!

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, இலங்கையில் புகலிடம் கேட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு புகார்களுக்கு ஆளான சாமியார் நித்யானந்தா, கைலாசம் என்ற தனது ராஜ்ஜியத்தில் வசிப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி தமக்கு மருத்துவ சிகிச்சைக்கு தங்குமிடம் வழங்குமாறு ரணிலிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதிக்கு நித்யானந்தா எழுதியுள்ள கடிதத்தில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவசரமாக மருத்துவ சிகிச்சை தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிகிச்சைக்கான செலவையும், அனைத்து மருந்துகளையும் கைலாசமே ஏற்கும் என்று தெரிவித்தார்.