பாடசாலை நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் :வெளியான அறிவிப்பு!

பாடசாலை நேரத்தை மாலை 4 மணி வரை நீடிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மாணவர்களின் விளையாட்டுக்காக அதிகரிக்கப்பட்ட மேலதிக நேரங்களை ஒதுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வித்துறையிலும் விளையாட்டுத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

தற்போது இளைஞர்களும், குழந்தைகளும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை கவலைக்குரிய விடயங்கள். பாடத்திட்டத்தில் எல்லாம் புகுத்தப்பட்டாலும் இது சாத்தியமில்லை.

கல்வி அமைச்சர் பாடத்திட்டத்தில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

விளையாட்டை பாடத்திட்டமாக கருதி மாலை 4 மணி வரை நடத்துவது மாணவர்களின் பாதுகாப்புக்கு நல்லது.

அதுமட்டுமின்றி இது பெற்றோர்-குழந்தை உறவை மேலும் வலுப்படுத்தும்.

குறைந்தது 2 மணித்தியாலங்களாவது சிறுவர்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.