நாட்டை உலுக்கிய கண்டிப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து!

கண்டி முல்கம்பல பிரதேசத்தில் வீதியில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது வேன் ஒன்று மோதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் வீதியில் பயணித்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி ஹீருஸ்ஸகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் அவரது சகோதரர் மற்றும் தாயார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின் முன்பக்க கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.