யாழினை சேர்ந்த 43 பேர் ஒரே ஹோட்டல் ஒன்றில் கைது : வெளியான காரணம்!

உனவடுன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் உட்பட 43 பேர் கடற்படையினரின் உதவியுடன் இன்று (23-10-2022) கைது செய்யப்பட்டதாக ஹபரதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக குறித்த ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

இந்த 43 பேரும் யாழ். மாவட்டத்தில் வசிப்பவர்கள் எனவும், அவர்களில் 33 ஆண்கள் 7 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு மாத காலமாக வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்த குழுவினர் நேற்று 5 நாள் சுற்றுலா செல்வதாக கூறி வவுனியாவில் இருந்து காலி உனவடுன நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.