திடீரென எரிபொருள் விலையில் மாற்றம்! : வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை இன்று அல்லது நாளை திருத்தப்படும்.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததாவது , ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .

இதன்படி, ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று அல்லது நாளை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்கேற்ப எரிபொருள் விலையும் குறைய வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை கொள்வனவு செய்வதில் காலதாமதம் செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.