போராட்டக்களத்தில் பொலிஸார் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்திய ஹிருனிக்கா !

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரம்மச்சந்திரவும் கலந்துகொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஹிருணிகா பொலிஸ் அதிகாரிகளுடன் ஆத்திரமடைந்த மோதல் சம்பவங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சிகளும் 150க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களும் கலந்துகொண்டுள்ளன.

இந்த போராட்டம் தற்போது பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பொலிஸாரும், கலவர எதிர்ப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் தடையை மீறும் முயற்சிகளை முறியடிக்க காவல்துறையும் கலவர தடுப்புப் பிரிவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.