O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் !

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இம்மாத இறுதியில் வெளியிடப்படும்.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடத்தப்பட்டது. இந்தப் பரீட்சைக்கு 517,496 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.