அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களாக பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றியவர்களுக்கு இந்தப் பதவி வழங்கப்படும்.

3,200 அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு தபால் மூலம் சமாதான நீதவான் நியமனத்திற்கான கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் சேவைகள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.