தண்டவாளத்தில் கழுத்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் ! தீவிர விசாரணையில் பொலிஸார் !

தண்டவாளத்தில் கழுத்தை வைத்து இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது மாத்தறை காளிதாஸ வீதியில் உள்ள தொடருந்து கடவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் இளைஞன் ஒருவரின் கழுத்தில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம் மாத்தறை புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டு மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.