பட்டத்தாரிகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல் !

நாட்டில் தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 12,000 பட்டதாரிகளை உடனடியாக சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அடுத்த வாரம் போட்டிப் பரீட்சை நடத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்தார்.

மேலும், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாடசாலைகளில் இணைந்துள்ள பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் அழகியல் பாடங்களுக்கு ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக போட்டிப் பரீட்சையை விரைவாக நடத்தி புதிய ஆசிரியர்களை ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் சேவையில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.