தேர்தலை உரிய நேரத்தில் நடாத்துவதே எனது விருப்பம் ஜனாதிபதி!

தேர்தலை பிற்போடும் எண்ணம் எனக்கு இல்லை எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் முடிவுகளுக்கு அமையவே உள்ளூராட்சி தேர்தல் நடாத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் ஜக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுபினர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது இதனைக் கூறியுள்ளார்.

மேலும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கட்சிகள் தனித்தனியாகவும் குழுவாகும் போட்டியிடுவது தொடர்பில் பல செய்திகள் பேசப்பட்டு வருகின்றன. இந் நேரத்தில் தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள் தேர்தல் வெற்றி தொடர்பில் கவவனத்தில் கொண்டு ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடாத்துவோம் என கூறியுள்ளார்.