சித்தியின் கொடுமை தாங்காமல் நான்கு கிலோமீட்டர் நடந்தே சென்று பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த 11 வயது சிறுமி !

சித்தியின் கொடுமையால் 11 வயது சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் நடந்துள்ளது.

சிறுமியின் தாயார் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், பின்னர் அவரது தந்தை மகள் உள்ள கணவனை இழந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் ஹொரோபோத்தன் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையம் வந்த சிறுமி, தனது சித்தி அவரது மகளிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வதாகவும், தன்னை துன்ர்றுத்துவதாகவும் சித்தியின் தொல்லை தாங்க முடியாமல் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சிறுமியின் வீட்டிலிருந்து பொலிஸ் நிலையம் சுமார் நான்கு கிலோமீற்றர் தொலைவில் உள்ளதாகவும், அந்த தூரம் நடந்து சென்று முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சிறுமியின் சித்தியான நாற்பத்தொரு வயதுடைய பெண்ணை கைது செய்த பொலிஸார், அவருக்கு எதிராக இன்று (05) சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.