இலங்கையில் மீண்டும் அதிகரிக்கவுள்ள சிற்றுண்டி விலைகள்!

இலங்கையில் எரிவாயுவின் விலையை இன்று (05-02-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைத்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமது உற்பத்திப் பொருட்களின் விலை திருத்தம் தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக தமது உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிட்டதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.