போதைப்பொருளை திருடியதாக கூறி கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞன் !

கொழும்பு – மாளிகாவத்தையில் போதைப்பொருள் தகராறு காரணமாக மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து இளைஞனை அழைத்துச் சென்று போதைப்பொருள் திருடியதாகக் கூறி அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.