முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் ! விசாரணைகள் தீவிரம் !

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதானபுரம் பகுதியில் கிணற்றில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் துவிச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி திருத்துனர் ஆகியோரின் மகனே இவ்வாறு உயிரிழந்ததாக புதுக்குடியிருப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞனின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில் இளைஞனின் மரணம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.