சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 21 வயது இளைஞன் !

ஹொரண பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வாகவத்தியிலிருந்து அருணகம நோக்கி மோட்டார் சைக்கிள் பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்தவர்கள் ஹொரணை ஆதார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் எல்பிட்டிய குடகல பகுதியைச் சேர்ந்தவர். மோட்டார் சைக்கிளை கவனக்குறைவாக செலுத்தியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.