ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் திடீர் தீ பரவல்

இன்று அதிகாலை மொரட்டுவை நகரில் உள்ள பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடை விற்பனை நிலையத்தில் திடீரென ஏற்ப்பட்ட தீ விபத்தினால் பாரிய சேதங்கள் ஏற்ப்பட்டுள்ளது இருப்பினும் இதுவரை தீ விபத்து ஏற்ப்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.

வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மின்கலங்களிலிருந்து தீ பரவியிருக்கலாம் என தீயணைப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.தீப்பரவலை இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்ப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது