பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் கொழும்பு -வசந்த முதலிகே

கொழுப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராவதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே  நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இது குறித்து கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் ரணிலின் முரட்டு அரசை விரட்டும் வகையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பில் நடாத்தப்படும் மக்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காத அரசிற்கு எதிராக நிச்சம் மக்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் என உறுதியாக கூறியுள்ளார்.

அத்துடன் நாடு முழுவதும் ம் தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள், வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் முழுமையாக ஆதரவளிக்கும் எனவும் கூறியுள்ளார்.