முட்டை குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் அடுத்த வாரம் முதல் முட்டை விலை குறைவடையும் என இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது முட்டை உற்பத்தியாளர்கள் கையிருப்பில் அதிகளவிலான முட்டைகளை சேமித்து வைத்திருப்பதால் முட்டைக்கு தட்டுபாடு நிலவுவதாகவும் மேலும் மக்கள் முட்டை உற்பத்தியாளர்களிடம் இருந்து முட்டைகளை வாங்கி சேமித்து வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்தோடு சந்தையில் தற்பொழுது முட்டை தேவையில் 30 வீதமே உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை கோழி வியாபார சங்கம் தெரிவித்துள்ளது.