பெண்கள் பாடசாலை மாணவியை போதைக்கு அடிமையாக்கி துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
மாணவி வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் மாணவியின் பெற்றோர் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து பொலிஸார் விசாரணையி்ல ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து கொழும்பில் உள்ள பிரபல விடுதியில் குறித்த இளைஞனும் மாணவியும் தங்கியிருந்ததையடுத்து பொலிஸார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த மாணவி இவ் இளைஞனுடன் 06 வருடங்கள் உறவில் இருந்துள்ளார்.
மேலும் இளைஞன் மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.