போலி நாணய தாள்களுடன் யாழ் பல்கலை மாணவன் மற்றும் ஆட்டோ சாரதி கைது!

  பெருமளவு போலி நாணயத்தாள்களுடன் யாழ்.பல்கலைகழக மாணவன் மற்றும் ஆட்டோ சாரதி ஆகியோர் கைதாகியுள்ளனர்.

சந்தேகநபர்கள் பளை பகுதியில் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

அவர்களிடமிருந்து 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 250 உம், 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 27 யும் பொலிஸார் இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.