தெஹிவளை பகுதியில்  நபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை!

கொழும்பு மாவட்டம் – தெஹிவளை பகுதியில்  நபர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தெஹிவளை, அவுபர்ன் சைட் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

 குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபரை வெட்டிக் கொன்ற சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.