அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு

   நிறுவன சட்டவிதிகளின்படி சகல அரச ஊழியர்களும் செயற்பட்டால் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாது என அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழு அண்மையில் கூடிய போது அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

 பதில் அனுப்புவது மிகவும் அத்தியாவசியமானது

அரச நிறுவனங்களில் பொது மக்களின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்வதும், நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் கடிதங்களுக்கு உடனடியாக பதில்களை அனுப்புவதும் முக்கிய விடயம் என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும்   அரச நிறுவனங்களில் தேவையான நேரங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார்.