குடி போதையில் பிள்ளைகளை சீரழித்த தந்தை!

திம்புல பத்தனை பிரதேசத்தில் தந்தையினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரண்டு சிறுமிகள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் நன்னடத்தையின் கீழ் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள், தந்தை தமக்கும் பாட்டிக்கும் தினமும் குடிபோதையில் துன்புறுத்துவதாக திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமிகளின் தாய் கொழும்பில் பணிபுரிவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்ததையடுத்து குறித்த சிறுமிகள் நன்னடத்தை மேற்பார்வையின் கீழ் மீண்டும் பட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.