இலங்கைக்கு அறிமுகம் செய்யப்படும் புதிய அரிசி!

இலங்கையில் நுகர்வோரின் அரிசிக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அரிசி வகையொன்றை சந்தைக்கு அறிமுகப்படுத்த அரிசி சந்தைப்படுத்தல் சபை (Rice Marketing Board) தீர்மானித்துள்ளது.

சிவப்பு அரிசியை நாடாக மாற்றி தங்க அரிசி என்ற பெயரில் சந்தையில் வெளியிடவுள்ளதாக அதன் தலைவர் புத்திக இத்தமல்கொட (Puthik Ittamalkoda) குறிப்பிட்டுள்ளார்.

நெல் கொள்வனவு செய்வதற்காக நாடளாவிய ரீதியில் 37 நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும், அம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து மாத்திரம் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு இன்னும் நெல் பெறப்படுவதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட மேலும் தெரிவித்துள்ளார்.